விபத்தில் தொழிலாளி பலி


விபத்தில் தொழிலாளி பலி
x

நெல்லை அருகே விபத்தில் தொழிலாளி பலியானார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள சங்கர்நகர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேர்மன் மகன் சுயம்பு (வயது 31). தொழிலாளியான இவர் நேற்று பண்டாரகுளம் நான்கு வழிச்சாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story