அருமனை அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

அருமனை அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கன்னியாகுமரி
அருமனை,
அருமனை அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தொழிலாளி பலி
அருமனை அருகே உள்ள சிதறால் வெள்ளாங்கோடு ஓணத்துவிளையை சேர்ந்தவர் முருகன் (வயது55), மரம் ஏறும் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வேலைக்கு சென்ற போது மரத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அருகில் நின்றவர்கள் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த முருகனுக்கு ராதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
Related Tags :
Next Story