கால்வாயில் தவறி விழுந்த தொழிலாளி பலி


கால்வாயில் தவறி விழுந்த தொழிலாளி பலி
x

மூங்கில்துறைப்பட்டு அருகே கால்வாயில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பாட்டு,

மூங்கில்துறைப்பட்டு அருகே தாமஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் அருளானந்தன் (வயது 34),கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் சவேரியார்பாளையம் கிளை கால்வாய் கரையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி கால்வாயில் விழுந்தார். இதில் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அருளானந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story