தம்பியை அரிவாளால் வெட்டிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தம்பியை அரிவாளால் வெட்டிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

களக்காடு அருகே தம்பியை அரிவாளால் வெட்டிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மூங்கிலடி வெப்பல் மேலத்தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (வயது 44). தொழிலாளி. இவருக்கும், அவரது தந்தை அல்போன்ஸ், தம்பி செல்வகுமாருக்கும் இடப்பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த 16-ந்தேதி அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஸ்டீபன்ராஜ் தனது தம்பி செல்வகுமாரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து களக்காடு போலீசில் செல்வகுமார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஸ்டீபன்ராஜை தேடி வந்தனர். இதையடுத்து அவர் தலைமறைவானார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஸ்டீபன்ராஜ் மூங்கிலடி குளக்கரையில் உள்ள அத்திமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பச்சமால் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தற்கொலை செய்து கொண்ட ஸ்டீபன்ராஜூக்கு இன்பராணி (33) என்ற மனைவியும், ஒரு மகனும், இரு மகள்களும் உள்ளனர்.

1 More update

Next Story