புடலங்காய் விளைச்சல் அமோகம்


புடலங்காய் விளைச்சல் அமோகம்
x
தினத்தந்தி 4 Sep 2023 8:00 PM GMT (Updated: 4 Sep 2023 8:01 PM GMT)

நிலக்கோட்டை அருகே புடலங்காய் விளைச்சல் அமோகமாக நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே உள்ள என்.ஊத்துப்பட்டி, தம்பிநாயக்கன்பட்டி, கோட்டூர், மைக்கேல்பாளையம், சங்கால்பட்டி, பிள்ளையார்நத்தம், சிலுக்குவார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் புடலங்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அங்கு தற்போது புடலங்காய் அமோக விளைச்சல் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது புடலங்காய்களை அறுவடை செய்து விற்பனைக்காக மார்க்கெட்டுக்கு அனுப்பி வருகின்றனர். மார்க்கெட்டில் புடலங்காய் கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story