விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த வாலிபர் கைது


விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த வாலிபர் கைது
x

விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள தாழையூத்து போலீஸ் நிலைய பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் மேலப்பாட்டம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சிவா என்ற நாராயணன் (வயது 27) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். பின்னர் அவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 7 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவானார். இதனால் அவருக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சிவாவை தாழையூத்து போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


Next Story