விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த வாலிபர் கைது

விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை அருகே உள்ள தாழையூத்து போலீஸ் நிலைய பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் மேலப்பாட்டம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சிவா என்ற நாராயணன் (வயது 27) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். பின்னர் அவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 7 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவானார். இதனால் அவருக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சிவாவை தாழையூத்து போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





