மண் அள்ளிய வாலிபர் கைது


மண் அள்ளிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 15 Feb 2023 6:45 PM GMT (Updated: 15 Feb 2023 6:46 PM GMT)

சிவகிரி அருகே மண் அள்ளிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி அருகே மேலக்கரிசல்குளம் கண்மாயில் மண் அள்ளுவதாக சிவகிரி போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்றனர். அப்போது, அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளியதாக வாசுதேவநல்லூர் கலைஞர் காலனியை சேர்ந்த நாராயண மூர்த்தி (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர். பொக்லைன் எந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story