சரள் மண் கடத்திய வாலிபர் கைது

சரள் மண் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சேரன்மாதேவி:
பத்தமடை மேலசடையமான் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது காருகுறிச்சியை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 24) என்பவர் ஓட்டிவந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரசு அனுமதியின்றி சரள் மண்ணை கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்தனர். மேலும் 1 யூனிட் சரள்மண் மற்றும் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





