மது விற்ற வாலிபர் சிக்கினார்

மது விற்ற வாலிபர் சிக்கினார்
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே உள்ள ெரயில்வே நிலையம் ரோடு அருகில் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்யப்படுவதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு அரசு அனுமதி இன்றி மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த அரசம்பாளையம் பிரிவை சேர்ந்த குணசேகரன் (வயது 26) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 21 மது பாட்டில்களையும் 5 ஆயிரத்து 80 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





