ஓட்டலில் திருடிய வாலிபர் கைது


ஓட்டலில் திருடிய வாலிபர் கைது
x

நெல்லை தச்சநல்லூரில் ஓட்டலில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை தச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர். இவர் தச்சநல்லூர் பஜாரில் புரோட்டா கடை நடத்தி வருகிறார். இவரின் கடையில் இருந்த தோசை கல்லை கடந்த 25-ந்தேதி மர்மநபர் ஒருவர் திருடி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் தச்சநல்லூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சங்கரன்கோவில் பாரதியார் தெருவை சேர்ந்த முருகன் மகன் பாடலிங்கம் (வயது 29) என்பவர் தோசை கல்லை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் அந்த தோசை கல்லை ரூ.750-க்கு விற்றது தெரியவந்தது.


Next Story