பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது


பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது
x

பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள பொட்டல்நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராசாத்தி (வயது37). இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். சம்பவத்தன்று இரவு ராசாத்தி அவருடைய குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (23) வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததை ராசாத்தி பார்த்து சத்தம் போடார். பின்னர் அவரை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்து செல்வராஜ் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சீவலப்பேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி செல்வராஜை நேற்று கைது செய்தார்.

1 More update

Related Tags :
Next Story