எருமப்பட்டியில் அனுமதியின்றி இயங்கிய தியேட்டருக்கு சீல்


எருமப்பட்டியில்  அனுமதியின்றி இயங்கிய தியேட்டருக்கு சீல்
x

எருமப்பட்டியில் அனுமதியின்றி இயங்கிய தியேட்டருக்கு சீல்

நாமக்கல்

எருமப்பட்டி:

எருமப்பட்டி பேரூராட்சியில் உரிய அனுமதி பெறாமல் தியேட்டர் இயங்கி வருவதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து சேந்தமங்கலம் தாசில்தார் செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தியேட்டருக்கு சென்று ஆய்வு நடத்தினர். அதில் தியேட்டர் உரிய அனுமதியின்றி இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தாசில்தார் செந்தில்குமார் தியேட்டரை பூட்டி சீல் வைத்தார். அப்போது துணை தாசில்தார் பாரதிராஜா, வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.


Next Story