தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிப்பு


தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிப்பு
x

கரூரில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி அரசியல் கட்சியினர், கொங்கு அமைப்பினர் அவரது உருவப்படம், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கரூர்

நினைவு தினம்

கரூரில் நேற்று சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கட்சி அலுவலகத்தில் மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

அ.தி.மு.க.

இதேபோல் கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கட்சி அலுவலகத்தில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் தீரன்சின்னமலை உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் நன்மாறன் தலைமையில் தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பல்ேவறு அமைப்பினா்...

கரூர் பஸ் நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னர் பகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை உருவ சிலைக்கு மாநில வர்த்தக அணி செயலாளர் விசா.ம.சண்முகம் தலைமையில் மாவட்ட செயலாளர் மூர்த்தி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல் கரூர் மாவட்ட தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் அருள்குமார் தலைமையில் தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல் பல்வேறு கொங்கு அமைப்பினர் சார்பில் தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதேபோல் மன்னர் வல்வில் ஓரி அரசு விழாவையொட்டி அவரது உருவப்படத்திற்கு தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


Next Story