தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு


தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு
x

கம்பைநல்லூர் அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு போனது.

தர்மபுரி

மொரப்பூர்:

கம்பைநல்லூர் அருகே உள்ள பெரமாண்டப்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடு்ம்பத்துடன் வெளியூர் சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது கதவு திறந்து இருந்ததால் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோவில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் மற்றும் 1¼ பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கம்பைநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story