பெண்ணிடம் 4 பவுன் செயின் திருட்டு


பெண்ணிடம் 4 பவுன் செயின் திருட்டு
x

ஊத்தங்கரையில் நெற்றியில் மயக்க விபூதி தடவி பெண்ணிடம் 4 பவுன் செயின் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை அருகே உள்ள மல்லிப்பட்டியை சேர்ந்தவர் துரை. விவசாயி. இவருடைய மனைவி அஸ்வினி (வயது 23). நேற்று மதியம் ஒரு ஆசாமி துரை வீட்டிற்கு வந்து பழைய நகைகளுக்கு பாலிஷ் போடுவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய அஸ்வினி தனது கால் கொலுசை கொடுத்துள்ளார். கொலுசை நன்றாக பாலீஷ் போட்டு கொடுத்துள்ளார். உடனே அந்த நபர் அஸ்வினியிடம் கழுத்தில் செயின் அழுக்காக உள்ளது. இதையும் கொடுங்கள் பாலீஸ் போட்டு தருகிறேன் என்று கூறி உள்ளார். அப்போது அந்த நபர் அஸ்வினி நெற்றியில் விபூதி போல் தடவி உள்ளார். இதில் அவர் மயங்கியவுடன் அந்த நபர் கழுத்தில் இருந்த 4 பவுன் செயினை திருடி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story