சிலம்ப பயிற்சியாளர் வீட்டில் 10 பவுன் நகைகள், பணம் திருட்டு


சிலம்ப பயிற்சியாளர் வீட்டில் 10 பவுன் நகைகள், பணம் திருட்டு
x
தினத்தந்தி 22 Nov 2022 6:45 PM GMT (Updated: 22 Nov 2022 6:46 PM GMT)

ஓசூரில் சிலம்ப பயிற்சியாளர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 10 பவுன் நகைகள், வெள்ளிப்பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூரில் சிலம்ப பயிற்சியாளர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 10 பவுன் நகைகள், வெள்ளிப்பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சிலம்ப பயிற்சியாளர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கோகுல்நகர், நந்தவனம் லே- அவுட் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது54). சிலம்ப பயிற்சியாளர். சம்பவத்தன்று மாலை, இவர் பயிற்சி வகுப்புக்கு வெளியே சென்று விட்டார். இவரது குடும்பத்தினர் வெளியில் சென்று இருந்தனர். பயிற்சி முடிந்த பின்னர் நாகராஜ் வீட்டுக்கு வந்தார்.

அப்போது வீட்டின் முன்பக்க இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவை திறந்து அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் மதிப்பிலான வெள்ளிப்பொருட்கள் மற்றும் 60 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகை, பணம் மற்றும் வெள்ளிப்பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நாகராஜ் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கதவு மற்றும் பீரோவில் பதிவாகி இருந்த தடயங்களை ஆய்வு செய்தனர்.

இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story