மயிலாடும் மலை முருகன் கோவிலில் திருட்டு


மயிலாடும் மலை முருகன் கோவிலில் திருட்டு
x

ஆம்பூர் அருகே மயிலாடும் மலை முருகன் கோவிலில் நடந்த திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர்

ஆம்பூர்


ஆம்பூர்அருகே மயிலாடும் மலை முருகன் கோவிலில் நடந்த திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்பூரை அடுத்த வடபுதுப்பட்டு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையையெட்டி உள்ள மயிலாடும் மலையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த ஆடி கிருத்திகை பெருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பூஜை முடித்துவிட்டு சென்றுள்ளனர். நேற்று காலை நிர்வாகிகள் சென்றபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியில் பணம் மற்றும் கோவிலில் இருந்த சில பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து அவர்கள் அளித்த தகவலின்பேரில் ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story