கடையில் பணம் திருட்டு; 2 பேர் கைது

நெல்லையில் கடையில் பணம் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை பேட்டை திரிபுரசுந்தரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நம்பி சிவன் (வயது 48). இவர் பாளையங்கோட்டை மங்கம்மாள் சாலையில் நெய் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் ரூ.1,500-ஐ திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து நம்பி சிவன் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குப்பதிவு செய்து, தூத்துக்குடி ரகுமத்துல்லாபுரத்தை சேர்ந்த கந்தாசிவா (20) மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 2 பேரை நேற்று கைது செய்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





