கடையில் பணம் திருட்டு; 2 பேர் கைது


கடையில் பணம் திருட்டு; 2 பேர் கைது
x

நெல்லையில் கடையில் பணம் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை பேட்டை திரிபுரசுந்தரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நம்பி சிவன் (வயது 48). இவர் பாளையங்கோட்டை மங்கம்மாள் சாலையில் நெய் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் ரூ.1,500-ஐ திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து நம்பி சிவன் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குப்பதிவு செய்து, தூத்துக்குடி ரகுமத்துல்லாபுரத்தை சேர்ந்த கந்தாசிவா (20) மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 2 பேரை நேற்று கைது செய்தார்.


1 More update

Next Story