வீட்டில் நகை- பணம் திருட்டு


வீட்டில் நகை- பணம் திருட்டு
x

பேட்டையை அடுத்த திருப்பணிகரிசல்குளத்தில் வீட்டில் நகை- பணம் திருடு போனது.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லையை அடுத்த திருப்பணிகரிசல்குளம் திருமால் நகரை சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி ராமலட்சுமி (வயது41). சிவா மின்வாரியத்தில் பணியாற்றி கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக இறந்து விட்டார். இந்நிலையில் ராமலட்சுமி தனது குழந்தைகளுடன் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று தனது மகனை பள்ளிக்கு அனுப்புவதற்காக வீட்டை பூட்டி சாவியை கதவில் வைத்துவிட்டு சென்றார். திரும்பி வந்தபோது வீடு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.24 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story