தேனூர் சுந்தரவள்ளி அம்மன்கோவில் திருவிழா


தேனூர் சுந்தரவள்ளி அம்மன்கோவில் திருவிழா
x

தேனூர் சுந்தரவள்ளி அம்மன்கோவில் திருவிழா

மதுரை

சோழவந்தான்,

சோழவந்தான்அருகே தேனூர் சுந்தரவள்ளிஅம்மன்கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா நடந்தது. சுந்தர வள்ளி அம்மன் சிறிய கோவிலில் இருந்து பெரிய கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு பக்தர்கள் பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து அக்னிசட்டி எடுத்து வந்தனர்.மறுநாள் காலை அம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி ஏழு கரககாரர்கள் முன்னிலையில் சக்தி கிரகம் எடுத்து முளைப்பாரி ஊர்வலம் வீதிஉலா நடைபெற்றது. வழிநெடுக அம்மனுக்கு பூஜைகள் செய்து அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கினார்கள். பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக சேத்தாண்டி வேஷம் மற்றும் கரும்புள்ளி செம்புலி குத்தி அம்மன் உடன் வந்தனர். அன்று இரவு அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளி விடிய, விடிய பவனி வந்து அதிகாலை கோவிலை அடைந்தது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். சமயநல்லூர் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

1 More update

Next Story