பெரம்பலூரில் இன்று 176 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள்


பெரம்பலூரில் இன்று 176 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள்
x

பெரம்பலூரில் 176 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் இன்று நடக்கிறது.

பெரம்பலூர்

தமிழகத்தில் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க அரசின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான 38-வது சிறப்பு முகாம்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இம்முகாம்களில் 9 ஆயிரத்து 220 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 29 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4 அரசு மருத்துவமனைகள், 143 மற்ற இடங்கள் என மொத்தம் 176 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே இன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு இரண்டாம் தவணைக்கு உள்ளவர்களும், 2 தவணை முடிந்து முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் செலுத்தி கொள்ளலாம் என்று மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story