திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நரிக்குறவர்கள் திரண்டதால் பரபரப்பு


திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நரிக்குறவர்கள் திரண்டதால் பரபரப்பு
x

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நரிக்குறவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, பெரம்பலூர் மாவட்டம் எறையூர் கிராமத்தை சேர்ந்த நரிக்குறவர்கள் நலச்சங்க தலைவர் கணேசன் ஆகியோர் தலைமையில் நரிக்குறவர்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க திரண்டனர். அப்போது கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற இருந்தது. இதனால் அங்கு வந்த நரிக்குறவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து இருந்தனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில், பெரம்பலூர் எறையூரில் கடந்த 1976-ம் ஆண்டு முதல் சுமார் 350 ஏக்கர் நிலத்தை நாடோடிகளாக அலைந்த 150 நரிக்குறவர்களுக்கு வீட்டு மனையாகவும், சாகுபடி செய்வதற்காகவும் அப்போதைய திருச்சி மாவட்ட கலெக்டர் வழங்கினார். 46 ஆண்டுகளாக அந்த நிலத்தை உழுது சாகுபடி செய்து வருகிறோம். ஆனால் அந்த இடத்துக்கு இன்று வரை பட்டா வழங்கவில்லை. ஆகவே நாங்கள் தங்கியுள்ள வீட்டுக்கும், சாகுபடி செய்யும் நிலத்துக்கும் பட்டா வழங்கி சீர்மரபினர் பழங்குடிகளாகிய எங்களை காக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.


Next Story