தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை -அமைச்சர் தகவல்


தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை -அமைச்சர் தகவல்
x

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

ஊட்டி,

பள்ளி கல்வித்துறை சார்பில், ''புதியன விரும்பு-2023" என்ற தலைப்பில் இந்த கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்பு படிக்க இருக்கும் மாணவர்களுக்கு 5 நாள் பயிற்சி முகாம் நீலகிரி மாவட்டம் ஊட்டி லவ்டேல் பகுதியில் உள்ள மத்திய அரசின் லாரன்ஸ் பள்ளியில் நேற்று நடைபெற்றது.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பறை இசை அடித்து முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் தமிழகத்தில் 38 மாவட்டங்களை சேர்ந்த 1,140 மாணவ-மாணவிகள் பங்கேற்று உள்ளனர். இங்கு மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் கலை, இலக்கியம், சமூக விழிப்புணர்வு உள்பட 15 வகையான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், இலக்கியவாதிகள் கலந்துகொண்டு பயிற்சி அளிக்கின்றனர்.

பள்ளிகள் திறப்பு

பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் ஏற்கனவே திட்டமிட்டபடி, 1 முதல் 5-ம் வகுப்புகள் வரை வருகிற ஜூன் 5-ந் தேதியும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 1-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை.

2 ஆண்டுகளில் 11 லட்சம் மாணவ-மாணவிகள் அரசு பள்ளிகளில் புதிதாக சேர்ந்து உள்ளனர். இந்த ஆண்டு 80 ஆயிரம் மாணவர்கள் புதிதாக அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்க விண்ணப்பங்களை பெற்றுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறி னார்.

முன்னதாக தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனம் நடந்தது. இதில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story