தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை இல்லை


தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை இல்லை
x

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை இல்லை என டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை இல்லை என டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.

டி.ஜி.பி. ஆய்வு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மொட்டமலை பகுதியில் உள்ள ராஜபாளையம் 11-வது பட்டாலியனில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக காவல் துறை இந்தியாவிலேயே புலன் விசாரணையில் முதலிடத்தில் உள்ளது. மத்திய பிரதேசத்தில் நடந்த காவல் துறைக்கான பணிதிறன்கள் போட்டியில் தமிழக காவல்துறை 8 தங்கம் உள்பட 11 பதக்கங்கள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது. தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் ரிவால்வர் பிரிவில் முதல் முறையாக தமிழக காவல்துறையை சேர்ந்த கான்ஸ்டபிள் தங்கப்பதக்கம் வென்றார்.

மத கலவரம் இல்லை

கடந்த 2 ஆண்டுகளாக காவல் துறையின் சிறப்பான செயல்பாட்டால் தமிழகத்தில் சாதி, மத கலவரம் இல்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் தமிழகத்தில் இல்லை. தமிழகம் அமைதியாக இருப்பதற்கு காரணம் பட்டாலியன். காவல் துறைக்கு பலமாக ராணுவமாக பட்டாலியன் படை பிரிவு உள்ளது. நான் டி.ஜி.பி.யாக பொறுப்பேற்ற பின் ஆயிரம் சப்-இன்ஸ்பெக்டர்கள், 10 ஆயிரம் காவலர்கள் பணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இப்போது 444 பேர் எடுக்கப்பட்டு தற்போது பயிற்சியில் உள்ளனர். 3,600 காவலர் பணிக்கு தேர்வு முடிந்துள்ளது. வரும் மே மாதம் புதிதாக 600 சப்-இன்ஸ்பெக்டர்கள் 3,600 காவலர்கள் சேர்க்கப்பட உள்ளனர். போலீசார் தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று தங்கம் வென்றால் ரூ.5 லட்சமும், வெள்ளி வென்றால் ரூ.3 லட்சம் ரொக்க பரிசாக வழங்கப்படுகிறது. காவலர்கள் விளையாட்டுகளிலும் ஆர்வமுடன் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மக்களுக்கு விழிப்புணர்வு

இதையடுத்து போலீசாரின் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக காவல்துறையில் மகளிர் போலீசார் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பொன்விழாவாக கொண்டாடப்படுகிறது. அதில் மகளிர் போலீசாருக்கு 9 சிறப்பு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். புக் ஷோ வழக்குகளில் காவல்துறையை எடுத்து வரும் நடவடிக்கைகளால் குற்றவாளிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. போக்சோ குற்றங்களை முழுமையாக தடுப்பதற்கு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பட்டாலியனில் அமைக்கப்பட்ட பூங்கா மற்றும் தோட்டத்தை டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.

1 More update

Related Tags :
Next Story