வயலோகம், மேலத்தானியம் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

வயலோகம், மேலத்தானியம் பகுதிகளில் நாளை மின்நிறுத்தப்படுகிறது.
அன்னவாசல்:
அண்ணாபண்ணை துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் வயலோகம், மாங்குடி, மண்ணவேளாம்பட்டி, அண்ணாபண்ணை, குடுமியான்மலை, பரம்பூர், புல்வயல், ஆரியூர், அகரப்பட்டி, பின்னங்குடி, விசலுார் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று இலுப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் அக்னிமுத்து தெரிவித்துள்ளார்.
மேலத்தானியம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், காரையூர் பகுதியான அரசமலை, வையாபுரி, நல்லூர், இடையாத்தூர், புலனார்குடி, ஒலியமங்கலம், சடையம்பட்டி, மறவா மதுரை, எம்.உசிலம்பட்டி, முள்ளிப்பட்டி, நெருஞ்சிகுடி, கங்காணிப்பட்டி, கீழத்தானியம், மேலத்தானியம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று பொன்னமராவதி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.






