புனித மோட்சராக்கினி மாதா ஆலயத்தில் தேர்பவனி


புனித மோட்சராக்கினி மாதா ஆலயத்தில் தேர்பவனி
x

புனித மோட்சராக்கினி மாதா ஆலயத்தில் தேர்பவனி

திருவாரூர்

கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடி மரக்கடை மேலத்தெருவில் புனித மோட்சராக்கினி மாதா ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அலங்கரிக்கப்பட்ட தேர்பவனி நடைபெற்று வருகிறது. அதன்படி ேநற்றுமுன்தினம் இரவு ஆலயத்தில் அலங்கரிக்கப்பட்ட தேர்பவனி நடந்தது. இதில் மாதா, ஏசுவுடன் தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த தேர்பவனி ஊர்வலம் மரக்கடை, லெட்சுமாங்குடி கடைவீதி சாலை மற்றும் கூத்தாநல்லூர் பகுதி வழியாக சென்று ஆலயத்தை வந்தடைந்தது. இதையடுத்து ஆலயத்தில் கூட்டு பாடல் திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு மாதாவை வழிபட்டனர்.


Next Story