வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு; மருமகள் கைது


வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு; மருமகள் கைது
x

நெல்லை அருகே வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி நகை பறித்த மருமகளை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே உள்ள வடுகன்பட்டியை சேர்ந்தவர் சண்முகவேல். இவருடைய மனைவி சீதா ராமலட்சுமி (வயது 59). நேற்று அதிகாலை கணவன்-மனைவி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டுக்குள் புகுந்த பெண் ஒருவர், சீதா ராமலட்சுமியை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் தங்க நகையை பறித்துச் சென்றார்.

இதில் தலையில் காயம் அடைந்த சீதா ராமலட்சுமியை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், சீதா ராமலட்சுமியின் மருமகளான மகாலட்சுமியே அவரை தாக்கி தங்கை நகைகளை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து மகாலட்சுமியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story