குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் திருவாதிரை தேரோட்டம்


குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் திருவாதிரை தேரோட்டம்
x

குற்றாலம் குற்றாலம் சுவாமி கோவிலில் நடைபெற்ற திருவாதிரை தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தென்காசி,

குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவாதிரை திருவிழா கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 6-ம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள், சுவாமி - அம்பாள் வீதி உலா ஆகியன நடைபெற்று வருகின்றன. மேலும் காலை 9.30 மணி மற்றும் இரவு 7 மணிக்கு நடராஜப் பெருமானுக்கு தாண்டவ தீபாராதனை நடக்கிறது.

திருவிழாவின் 5-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. காலை 8.45 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. முதலில் விநாயகர் தேர், அதை தொடர்ந்து முருகன் தேர், பின்னர் நடராஜர் தேர், அதன் பிறகு குற்றாலநாத சுவாமி தேர், இறுதியாக குழல்வாய்மொழி அம்மை தேர் ஆகிய 5 தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்பட்டன.

இந்த 5 தேர்களும் ரத வீதிகளில் சுற்றி நிலையத்தை அடைந்தன. காலை 11 மணிக்கு தேரோட்டம் முடிவடைந்தது. இந்த விழாவில் தென்காசி, குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story