மகளை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு திருவண்ணாமலை கோர்ட்டில் ஆயுள் தண்டனை

மகளை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு திருவண்ணாமலை கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
மகளை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு திருவண்ணாமலை கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
பாலியல் பலாத்காரம்
போளூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் அவருடைய 16 வயது மகளை கொலை மிரட்டல் விடுத்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கூலி தொழிலாளியை கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை போக்சோ வழக்குகளுக்காக சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நேற்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார். அதில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். பின்னர் அவரை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.






