தூத்துக்குடி: ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி தேரோட்டம்


தூத்துக்குடி:  ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி தேரோட்டம்
x

ஆழ்வார் திருநகரி, ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெறுகிறது.

தூத்துக்குடி


தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நவதிருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மாலையில் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து அருள் பாலித்து வருகிறார்.

5-ம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி பிரான் கருட வாகனத்திலும்,சுவாமி நம்மாழ்வார் அன்னவாகனத்திலும்,மதுரகவி ஆழ்வார் தங்க பல்லக்கிலும் எழந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தனர்.

9-ம் திருவிழாவான இன்று காலை 8 மணிக்கு நம்மாழ்வார் திருத்தேரில் எழுத்தருளினார். 8.30 மணியளவில் பக்தர்கள் கோவிந்தா, கோபாலா என்ற கர கோஷத்துடன் நான்கு ரத வீதிகளில் தேரைவடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

நிகழ்ச்சியில் எம்பெருமானார் பேரருளாளர் ராமானுஜ ஜீயர், உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆழ்வார் திருநகரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்

நாளை தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகின்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அஜித் தக்கார், மணிகண்டன், அலுவலக இளநிலை பணியாளர் பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story