முப்பெரும் விழா


முப்பெரும் விழா
x

தூத்துக்குடியில் முப்பெரும் விழா நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நெய்தல் எழுத்தாளர்கள், வாசகர்கள் இயக்கம் 3-ம் ஆண்டு தொடக்க விழா, மூன்று நூல்கள் வெளியீடு, உதவித்தொகை வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா நடந்தது. விழாவில் பனியமாதா ஆலய பங்குதந்தை குமார் ராஜா ஆசி வழங்கினார். சென்னை பரவா் நலப்பேரவை தலைவா் சகாயராஜ் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் ரெக்ஸ்லின், தேசிய பாரம்பாிய மீனவா் கூட்டமைப்பு சின்னத்தம்பி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சாக்ரோ இறைவணக்கம் பாடினாா். வினோஜின் வரவேற்றார். இயக்க வரலாறு குறித்து தேவ் ஆனந்த் பேசினர். விழாவில் 3 நூல்கள் வெளியிடப்பட்டன.

விழாவில் முன்னாள் நகரசபை தலைவர் மனோஜ்குமார், முன்னாள் துணை மேயர் சேவியர், கடல்சார் மக்கள் நலச்சங்கமம் பிரவீன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் எழுத்தாளர் நெய்தல் அண்டோ ஏற்புரை வழங்கினார்.


Next Story