வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருப்பத்தூர்

வாணியம்பாடியை அருகே உதயேந்திரம் எருதுகர சவரி சந்து பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் காடிஸ் என்ற காட்லின் மோசஸ் (வயது 31). இவரை திருட்டு வழக்கில் நாட்டறம்பள்ளி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் உத்தரவிட்டார்.

1 More update

Next Story