வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

நெல்லையில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

நாங்குநேரி மஞ்சங்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவா் சாமிதுரை (வயது 25) என்பவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தாழையூத்து அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜேக்கப் (30) என்பவரை நாங்குநேரி போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதனை மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஏற்று, ஜேக்கப்பை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி ஜேக்கப் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான ஆணையை சிறையில் போலீசார் வழங்கினர்.

1 More update

Next Story