வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

நாங்குநேரி அருகே வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

நாங்குநேரி தாலுகா ஆலங்குளம் கீழ தெருவைச் சேர்ந்தவர் ராம்தாஸ் (வயது 36). இவரை புகையிலை பொருட்கள் கடத்தி வந்த வழக்கில் பெருமாள்புரம் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் ராம்தாஸை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கு மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், மேலப்பாளையம் உதவி கமிஷனர் சதீஷ்குமார் ஆகியோர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமாருக்கு பரிந்துரை செய்தனர்.

அதனை அவர் ஏற்று ராம்தாஸை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கான ஆணையை பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் பாளையங்கோட்டை சிறையில் வழங்கினார்.


Next Story