வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திருநெல்வேலி
நெல்லை அருகே உள்ள ராமையன்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 25). இவர் மானூர் போலீசாரால் கொலை முயற்சி, அடிதடி மற்றும் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதனை கலெக்டர் விஷ்ணு ஏற்று, சரவணனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான ஆணையை மானூர் இன்ஸ்பெக்டர் சபாபதி, பாளையங்கோட்டை மத்திய சிறை அதிகாரியிடம் வழங்கினார்.
Related Tags :
Next Story