வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

நெல்லையில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருநெல்வேலி

மானூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் சுரேஷ் என்ற சுரேஷ்குமார் (வயது 33). இவரை மானூர் போலீசார் கொலை முயற்சி, அடிதடி, திருட்டு, கொள்ளை வழக்கில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று சுரேஷ்குமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

1 More update

Next Story