தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை22,921 மாணவ, மாணவியர்எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுகின்றனர


தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை22,921 மாணவ, மாணவியர்எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுகின்றனர
x
தினத்தந்தி 5 April 2023 6:45 PM GMT (Updated: 5 April 2023 6:45 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை 22,921 மாணவ, மாணவியர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுகின்றனர

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று(வியாழக்கிழமை) தொடங்க உள்ள எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 22 ஆயிரத்து 921 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு

தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வுகள் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 20-ம் தேதி வரை நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 107 மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. மாவட்டத்தில் 310 பள்ளிகளில் பயிலும் 22 ஆயிரத்து 921 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதில் 230 மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்வு எழுதுகின்றனர்.

கண்காணிப்பு

மாவட்டத்தில் 22 வினாத்தாள் கட்டுக்காப்பகங்கள் அமைக்கப்பட்டு ள்ளன. இந்த வினாத்தாள் கட்டுக்காப்பகங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வினாத்தாள் கட்டுக்காப்பகங்களில் இருந்து வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்ல 22 வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இந்த தேர்வை கண்காணிக்க 107 முதன்மை கண்காணிப்பாளர்கள், 107 துறை அலுவலர்கள், 1200 அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் 214 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த தேர்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. தேர்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்.ரெஜினி தலைமையிலான அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Next Story