மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x

சாத்தங்குடி மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.

மயிலாடுதுறை

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குறிச்சி அருகில் உள்ள சாத்தங்குடி மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 8-ந் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. முக்கிய திருவிழாவான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதை முன்னிட்ட திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காணப்பிக்கப்பட்டது. பின்னர் கோவில் அருகே அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று மஞ்சள் நீர் விளையாட்டுடன் விழா நிறைவு பெற்றது.


Next Story