திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்


திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
x
தினத்தந்தி 24 Jun 2023 6:35 PM GMT (Updated: 25 Jun 2023 6:36 AM GMT)

சோளிங்கர் அருகே திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

ராணிப்பேட்டை

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே கல்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாைவ முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி திரவுபதி அம்மன், அர்ஜுனன் சாமிக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து மாலை திரவுபதி அம்மன், அர்ஜுனன் சாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்து பட்டாடை, தங்க ஆபரணங்கள் அணிவித்து மலர்மாலை அலங்காரம் செய்யப்பட்டு மணக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்ந்து மங்கள வாத்தியங்களுடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story