திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி


திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி
x
தினத்தந்தி 8 Jan 2023 6:45 PM GMT (Updated: 8 Jan 2023 6:45 PM GMT)

திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் கீழையூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சிவானந்தவல்லி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. இதில் திருக்கோவிலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரகண்டநல்லூர் லட்சுமி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, திருக்கோவிலூர் உண்டு உறைவிட பள்ளி மற்றும் ஸ்ரீசிக்க்ஷகேந்திரா மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு ஓய்வு பெற்ற பேராசிரியர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். விழா குழுவை சேர்ந்த ராஜேஸ்வரி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருக்கோவிலூர் தொழிலதிபர் ஜே.எம். என்கிற ஜெ.முருகன் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டி பேசினார். விழாவில் கலந்து கொண்ட ஓதுவருக்கு கோவில் குருக்கள் ரமேஷ் மாலை அணிவித்து கவுரவப்படுத்தினார். இதில் சிவ தொண்டர்கள் திருமுருகன், வக்கீல் தில்லைநடராஜன், திருக்கோவிலூர் நகர பா.ஜ.க. தலைவர் எஸ்.டி.புவனேஸ்வரி, ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் சுப்பிரமணியன், தயானந்தன், டி.எஸ்.ஏ.குமார், செந்தில்குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கோவில் அலுவலர் மிரேஷ்குமார் நன்றி கூறினார்.


Next Story