திருவள்ளூரில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் 8-ந் தேதி ஒத்திவைப்பு - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்


திருவள்ளூரில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் 8-ந் தேதி ஒத்திவைப்பு - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்
x

திருவள்ளூரில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் வருகிற 8-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும். என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவில் இன்று(வியாழக்கிழமை) நடைபெறவிருந்த விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களின் அடிப்படையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டம் வருகிற 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை)அன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும். என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


Next Story