6-வது நாளாக தொடர்ந்து எரியும் திருவண்ணாமலை மகா தீபம்...!


6-வது நாளாக தொடர்ந்து எரியும் திருவண்ணாமலை மகா தீபம்...!
x

திருவண்ணாமலையில் மகா தீபம் 6-வது நாளாக இன்றும் எரிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவின் போது கடந்த 6-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை மீது காட்சி அளிக்கும்.

இந்த நிலையில் 2,668 அடி உயரம் கொண்ட மலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் தொடர்ந்து 6-வது நாளான இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) சுடர் விட்டு எரிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறது. இதனை பக்தர்கள் பக்தி பரவத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர்.


Next Story