தமிழகத்தில் இன்று மேலும் 7 பேருக்கு கொரோனா


தமிழகத்தில்  இன்று மேலும்  7 பேருக்கு கொரோனா
x

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக சரிந்து வந்தது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்க எண்ணில் பதிவாகி வருவது மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே பாதிப்பு எண்ணிக்கை வேகமாக சரிந்து வந்தது. தற்போது ஒற்றை இலக்க எண்ணில் கொரோனா பாதிப்பு பதிவாகி வருவது மக்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆண்கள், 2 பெண்கள் உள்பட மொத்தம் 7 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 3 பேர் உள்பட மொத்தம் 3 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. சேலம், திருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட 35 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. தமிழகத்தில் கொரோனா தோற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.


Next Story