தமிழ்நாட்டில் இன்று 7 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு


தமிழ்நாட்டில் இன்று  7 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
x

தமிழ்நாட்டில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

அமெரிக்காவில் இருந்த வந்த ஒருவர் உள்பட தமிழ்நாட்டில் 4 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் என 7 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை, வேலூர் ஆகிய 3 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 35 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் இன்று எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. மேற்கண்ட தகவல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story