தமிழகத்தில் இன்று 7 பேருக்கு கொரோனா


தமிழகத்தில் இன்று 7 பேருக்கு கொரோனா
x

தமிழத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் கடந்த பல வாரங்களாவே கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. அந்த வகையில், இன்றைய கொரோனா பாதிப்பு வெறும் 7 ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

புதிதாக 2 ஆண்கள், 5 பெண்கள் உள்பட மொத்தம் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர் உள்பட 3 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 35 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. தமிழகத்தில் கொரோனா தோற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை" என்றார்.


Next Story