டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான பயிற்சி வகுப்பு


டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான பயிற்சி வகுப்பு
x
தினத்தந்தி 10 July 2023 8:34 PM GMT (Updated: 11 July 2023 11:28 AM GMT)

தஞ்சை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான பயிற்சி வகுப்பு வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-1 முதல்நிலைத்தேர்விற்கான அறிவிப்பு ஆகஸ்டு மாதம் வெளியிடப்பட உள்ளது. இதன்மூலம் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குரூப்-1 முதல்நிலை தேர்வானது உத்தேசமாக நவம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1, குரூப்-2, குரூப்-2 (ஏ) முதல்நிலை தேர்வுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

இந்த பயிற்சி வகுப்பானது வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்பு அனுபவமிக்க சிறப்பு வல்லுனர்களை கொண்டு நடத்தப்படுவதோடு, பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது.தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் தேர்வின்பெயர், தங்களது பெயர் மற்றும் கல்வித்தகுதியை குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தகவல் அனுப்பி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story