டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1, காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1, காவலர் தேர்வுக்கு   இலவச பயிற்சி வகுப்புகள்
x

டி.என்.பி.எஸ்.சி.குரூப்-1, காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது என்று கலெக்டர் தகவல் தெரிவித்து உள்ளார்.

ராமநாதபுரம்

டி.என்.பி.எஸ்.சி.குரூப்-1, காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது என்று கலெக்டர் தகவல் தெரிவித்து உள்ளார்.

ேபாட்டித்தேர்வு

மாநில அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் மற்றும் மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு விண்ணப்பித்து தயாராகிவரும் இளைஞர்களுக்காக ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் என்ற அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள், மாதாந்திர இதழ்கள் மற்றும் நாளிதழ்கள் அடங்கிய நூலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பலர் போட்டித்தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனர்.

குரூப்-1, காவலர் தேர்வு

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப்-1 தேர்வு மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. மேலும் இந்த தேர்வுகளுக்கான அறிமுக வகுப்பு 3.8.22 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க ஆர்வமும், விருப்பமும் உள்ள போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் அறிமுக வகுப்பு நாளில் தங்களது மார்பளவு புகைப்படம் மற்றும் மேற்காணும் தேர்வுக்கு விண்ணப்பித்த விவரங்களுடன் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

இப்பயிற்சி தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 9487375737 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயனடையுமாறு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் தெரிவித்துள்ளார்


Next Story