விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு 22-ந் தேதி தொடங்குகிறது


விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில்  டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு  22-ந் தேதி தொடங்குகிறது
x

விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

விழுப்புரம்



விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டி தேர்வில் கலந்துகொண்டு பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசு பணிகளில் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள குரூப்-1 முதல்நிலை தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 22-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்பட உள்ளது.

இன்றைக்குள்...

இப்பயிற்சி வகுப்பானது திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை வார நாட்களில் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடைய விரும்பும் நபர்கள், இன்று (வெள்ளிக்கிழமைக்குள்) விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த படித்த இளைஞர்கள், இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இந்த தகவல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story