டிஎன்பிஎஸ்சி 2023-ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை வெளியீடு...!


டிஎன்பிஎஸ்சி 2023-ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை வெளியீடு...!
x

கோப்புக்காட்சி

2023-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையில் குரூப் -1 தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது திருத்தப்பட்ட வருடாந்திர அட்டவணையை வெளியிட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன் டிஎன்பிஎஸ்சி 2023ம் ஆண்டுக்கான வருடாந்திர அட்டவணையை வெளியிட்டது. இந்த அட்டவணையில் குரூப் 1 மற்றும் 2 குறித்த எந்த ஒரு விவரமும் இடம் பெறவில்லை. இது தேர்வர்கள் மத்தியில் கடும் அதிதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் காலிப்பாணியிடங்களின் எண்ணிக்கையும் 1750 என்ற அளவிலேயே இருந்தது. தேர்வர்கள் பலரும் காலிபணியிடங்களை அதிகரிக்க தேர்வாணையத்திடம் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில் குரூப் 1 தேர்வு குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளது. அதன்படி குரூப் 1 தேர்வு அறிவிப்பு ஆகஸ்ட் 2023ல் வெளியிடப்படும் எனவும் முதல்நிலை தேர்வு நவம்பர் மாதமும், முதன்மை தேர்வு ஜூலை 2024ல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 1 தேர்வு முதல்நிலை தேர்வு முடிவுகள் 2024 மார்ச் மாதமும், முதன்மை தேர்வு முடிவுகள் 2024 நவம்பர் மாதமும் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.


Next Story