டி.என்.பி.எஸ்.சி. தேர்வு


டி.என்.பி.எஸ்.சி. தேர்வு
x
தினத்தந்தி 7 May 2023 6:45 PM GMT (Updated: 7 May 2023 6:46 PM GMT)

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடந்தது.

ராமநாதபுரம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஊரக வளர்ச்சித்துறை சாலை ஆய்வாளர் மற்றும் மேற்பார்வையாளர் பணிக்கான தேர்வு நேற்று காலை மற்றும் மாலை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த தேர்வு எழுத 933 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ராமநாதபுரம் செய்யது அம்மாள் மெட்ரிக் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, டி.டி.விநாயகர் மேல்நிலைப்பள்ளி, செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, ஏ.வி.எம்.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.

தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களில் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. இதற்கிடையே ராமநாதபுரம் ஏ.வி.எம்.எஸ்.மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற தேர்வை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story